ஸன்யாஸஸ்து1 மஹாபா3ஹோ து3: க2மாப்1து1மயோக3த1: |
யோக3யுக்1தோ1 முனிர்ப்1ரஹ்ம நசி1ரேணாதி4க3ச்1ச2தி1 ||6||
ஸன்யாஸஹ----துறப்பது; து—--ஆனால்; மஹா-பாஹோ---வலிமையான கைகளை கொண்டவரே; துஹ்கம்--—கடினம்; ஆப்தும்--—அடைவது; அயோகதஹ--—செயல் யோகம் இன்றி; யோக-யுக்தஹ----கர்மயோகத்தில் வல்லவரான; முனிஹி—--ஒரு முனிவர்; ப்ரஹ்ம--—ப்ரஹ்மன்; ந சிரேண—--விரைவாக; அதிகச்சதி--—உச்சத்தை அடைகிறார்
BG 5.6: பக்தியில் (கர்ம யோகம்) வேலை செய்யாமல் பரிபூரணமான துறவு (கர்ம ஸன்யாஸம்) அடைவது கடினம், ஓ வலிமையான கைகளைக் கொண்ட அர்ஜுனனே, ஆனால் கர்ம யோகத்தில் திறமையான முனிவர் விரைவாக உச்சத்தை அடைகிறார்.
ஸன்யாஸஸ்து1 மஹாபா3ஹோ து3: க2மாப்1து1மயோக3த1: |
யோக3யுக்1தோ1 முனிர்ப்1ரஹ்ம நசி1ரேணாதி4க3ச்1ச2தி1 ||6||
பக்தியில் (கர்ம யோகம்) வேலை செய்யாமல் பரிபூரணமான துறவு (கர்ம ஸன்யாஸம்) அடைவது கடினம், ஓ வலிமையான கைகளைக் கொண்ட அர்ஜுனனே, ஆனால் கர்ம யோகத்தில் திறமையான …
Sign in to save your favorite verses.
Sign InStart your day with the timeless inspiring wisdom from the Holy Bhagavad Gita delivered straight to your email!
இமயமலையில் உள்ள ஒரு குகையில் வசிக்கும் ஒரு யோகி, தான் உலகைத் துறந்துவிட்டதாக உணரலாம், ஆனால் அந்தத் துறவின் சோதனை அவர் நகரத்திற்குத் திரும்பும்போது வருகிறது. உதாரணமாக, ஒரு முனிவர் கர்வால் மலையில் பன்னிரண்டு ஆண்டுகள் துறவு கடைபிடித்தார். கும்பமேளா என்றழைக்கப்படும் புனித கண்காட்சியில் பங்கேற்பதற்காக அவர் ஹரித்வாருக்கு வந்தார். அந்த சலசலப்பில், யாரோ ஒருவர் தற்செயலாக தனது காலணியை ஸாதுவின் பாதத்தின் மீது வைத்தார். ஸாது கோபமடைந்து, 'நீ குருடனா? நீ எங்கே போகிறாய் என்று உன்னால் பார்க்க முடியவில்லையா?’ பிறகு கோபம் வர அனுமதித்ததற்காக மனம் வருந்தி, ‘பன்னிரண்டு வருடங்கள் மலைகளில் இருந்த துறவுகள் ஊரில் ஒரு நாள் வசித்ததால் கரைந்து போனது!’ என்று புலம்பினார், இந்த உலகம் நமது துறவு பரீட்சிக்கப்படும் திறந்தவெளி அரங்கம்.
இந்த வசனத்தில், ஸ்ரீ கிருஷ்ணர் உலகில் ஒருவரின் கடமைகளைச் செய்யும்போது, ஒரு நபர் கோபம், பேராசை, மற்றும் ஆசை ஆகியவற்றிலிருந்து மெதுவாக உயர கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறுகிறார். மாறாக, ஒருவர் முதலில் கடமைகளைக் கைவிட்டால், மனதைத் தூய்மைப்படுத்துவது மிகவும் கடினம்; தூய்மையான மனம் இல்லாமல், உண்மையான பற்றின்மை தொலைதூரக் கனவாகவே இருக்கும்.
நாம் அனைவரும் நமது இயல்புக்கு ஏற்றவாறு வேலை செய்யத் தூண்ட படுகிறோம். அர்ஜுனன் ஒரு போர்வீரர். அவர் தன்னிச்சையாக கடமையை துறந்து காட்டிற்குச் சென்றால் அவருடைய இயல்பு அவரை அங்கேயும் வேலை செய்ய தூண்டும். அவர் அனேகமாக சில பழங்குடியினரை கூட்டி அவர்களுக்கு ராஜாவாக தன்னை அறிவித்துக் கொள்வார். மறுபுறம் கடவுளின் சேவையில் அவரது இயல்பான விருப்பங்களையும் திறமைகளையும் பயன்படுத்துவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த கருத்தை மனதில் கொண்டு ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனிடம் போரிட கூறி ஒரு விஷயத்தை மாற்றும்படி அறிவுறுத்துகிறார். நீ உன்னுடைய ராஜ்யத்தை காப்பாற்ற வேண்டுமென்று போர் புரிய வந்தாய். இப்போது உன் சேவையை தன்னலமின்றி கடவுளுக்கு அர்ப்பணித்து விடு. இந்த வழியில், நீ இயற்கையாகவே மனதை தூய்மைப்படுத்தி உள்ளிருந்து உண்மையான துறவை அடைவாய் என்று கூறுகிறார்.
ஒரு மென்மையான மற்றும் பழுக்காத பழம் அதை தாங்கி வளர்க்கும் மரத்தில் வேகமாக ஒட்டிக்கொள்கிறது. ஆனால், அதே பழம், முழுமையாக பழுத்தவுடன், அதே மரத்துடன் தனது தொடர்பைத் துண்டிக்கிறது. அதேபோல, கர்ம யோகி ஜட இருப்பிலிருந்து பெரும் அனுபவத்தினால், முதிர்ச்சி அடைந்து ஞானத்தின் பாதையில் முன்னேறுகிறார். கடினமாக உழைத்தவர்களுக்கு மட்டுமே நல்ல தூக்கம் சாத்தியமாகிறது, கர்ம யோகத்தின் மூலம் மனதைத் தூய்மைப்படுத்தியவர்களுக்கு ஆழ்ந்த தியானம் ஒரு சாத்தியக் கூறு.